Monday, August 17, 2009

அண்ணன் : ஒரு பக்கக் கதை

தங்கை கோமதியன் கழுத்தில் தாலியேறியதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்ட தாமோதரனுக்கு மாப்பிள்ளைவீட்டார் சிலரின் பாராட்டுதான் புரியவில்லை.

வீட்டை அடமானம் வெச்சாவது தங்கச்சி கல்யாணத்தை நடத்தணும்னு நினைக்கற அண்ணன் கிடைக்க கோமதி குடுத்து வைச்சிருக்கணும்.

தாமோதரன் குழம்பிப் போனான்.

பத்து வருடம் வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி சம்பாதித்த காசைக் கொண்டுதானே கல்யாணத்தை முடிச்சிருக்கிறேன். இவர்கள் ஏன் இப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோமதி வந்துதான் குழப்பத்தைத் தீர்த்தாள்.

அண்ணா நான் போற இடம் எப்படியோ தெரியாது. ஒரு வேளை பேராசைக்காரர்களா இருந்து இப்ப இருக்கிற வீ உங்கப்பா சம்பாதிச்சதுதானே? அதில் உன் பங்கை வாங்கி வான்னு சொல்லிட்டாகன்னா என்ன பண்றது?! அதனால்தான் இப்பவே... அந்த வீட்டு மேல நாலு லட்சம் கடன் வாங்கித்தான் எங்கண்ணன் இந்தக் கல்யாணத்தை நடத்துதுன்னு ஒரு பொய்யை மாப்பிள்ளை வீட்டுப்பக்கம் பரப்பிவிட்டேன். இனி அவங்க நம்ம வீட்டைப் பத்தி நினைக்கமாட்டாங்க... என்றாள் கோமதி.



நன்றி : குமுதம் , தினமலர்

No comments:

Post a Comment