என் மனைவி பொரித்து வைத்த அரிசி வற்றலை எடுத்து வாயில் போட்டுப் பார்த்தேன். சப்பென்று இருந்தது. வடாம், வற்றல் மட்டுமல்ல... என் நண்பர் ஆறுமுகம் அறிமுகப்படுத்திய கடைகளில் வாங்கிய பொருட்கள் எல்லாம் சுமார் ரகம்தான். இந்த லட்சணத்தில் நான் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்ய வேண்டுமாம்.
"போலீஸ் துறையில் வேலை பார்க்கும் ஆறுமுகம் எதற்காக இந்த கடைகளில் விற்கும் பொருட்களுக்கே சிபாரிசு செய்கிறார்? ஒரு வேளை வாராவாரம் போய் மாமூல் வாங்கிக் கொள்வாரோ?
""கோபால்! நான் சொன்ன கடைகளில் விற்கிற பொருட்கள் எல்லாம் ஜெயில்ல இருக்கிற கைதிகள் தயார் செஞ்சு அனுப்புறது. கைதிகள் திருந்தி வாழணும்னு ஜெயிலுக்குள்ளே கைத்தொழில் கத்துக்கொடுத்துட்டு, அப்புறம் அதை நாமளே உதாசீனப்படுத்தினா எந்த சுயநலமும் இல்லைப்பா. கூடிய சீக்கிரம் அவங்களும் தரமா தயாரிப்பாங்க!'' - சிறைக்காவலாளியாகப் பணிபுரியும் என் நண்பர் ஆறுமுகம் என்னிடம் சொல்ல, ஆறுமுகம் அறிமுகப்படுத்திய கடைகளிலேயே தொடர்ந்து பொருட்கள் வாங்க தீர்மானித்தேன்.
நன்றி : குமுதம், தினமலர்.com
No comments:
Post a Comment