Tuesday, August 18, 2009

இந்தியாவுக்கு பாக்., தர வேண்டிய பாக்கி

சுதந்திரத்தின் போது, இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளாக பிரிந்தன. இரு நாடுகளுக்கு இடையிலான நிதி கணக்குகளும் பிரிக்கப்பட்டன. அப்போது இந்தியாவுக்கு பாகிஸ்தான் தர வேண்டிய பாக்கியாக 300 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.



1950 - 51ம் ஆண்டு பட்ஜெட்டில் இது கடன் பொறுப்புகள் கணக்கில் காட்டப்பட்டது. அதன்பின், இந்த தொகையை பாகிஸ்தான் திருப்பிக் கொடுக்கவில்லை. முதல் பட்ஜெட்டிலிருந்து தற்போது வரை இந்த கடன் தொடர்ந்து ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கடன் பொறுப்புகள் பிரிவில் நிலுவையில் உள்ளது.



கடந்த பட்ஜெட்டில் இந்தியாவின் மொத்த கடன் பொறுப்புத் தொகை 34 லட்சத்து 95 ஆயிரத்து 452 கோடி ரூபாய். அதில் பாகிஸ்தான் தர வேண்டிய 300 கோடி ரூபாய் என்பது, 0.008 சதவீதம்தான். ஆனால் அன்று 1951ல் பட்ஜெட்டில் இந்தியாவின் மொத்த கடன் பொறுப்பு 2 ஆயிரத்து 865 கோடி ரூபாய். இதில் பாகிஸ்தான் கடன் ஏறத்தாழ 10 சதவீதத்துக்கும் அதிகம். தற்போது பணத்தின் மதிப்புக்கேற்ப கணக்கிட்டால் அதன் மொத்த மதிப்பு சில ஆயிரம் கோடிகளை எட்டும். இந்த கடனுக்கு இதுவரை இந்தியா வட்டி ஏதும் கணக்கிடவில்லை. 1947ல் சுதந்திரம் அடைந்தவுடன், இந்தியா பாகிஸ்தானுக்குத் தரவேண்டிய 50 கோடி ரூபாயை உடனடியாக பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட்டது.

நன்றி : தினமலர்.com

No comments:

Post a Comment